Thursday, November 29, 2012

போட்டி......போட்டி ........ போட்டா போட்டி!!!

ப்ளாக் ஆரம்பிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளாக்கையும் ஆரம்பிச்சுட்டு அதுல பதிவுன்றதே அத்தி பூத்த மாதிரி இருக்கு...மைண்ட்ல நிறைய உருப்படியான சப்ஜக்ட் இருந்தும் அதை முறைப்படி கொஞ்சம் நெட்டில் ரெஃபர் செய்து ஆற அமர எழுத நேரமின்மையால் ஏதோ மொக்கை பதிவா போட்டு காலத்தை ஓட்டிக்கிட்டுருக்கேன்.... :((...


அதான் எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தானே....வேற மேட்டர் கிடைக்காததானால பதிவு போட முடியாததையே ஒரு பதிவா எழுதப் போறியான்னு கேட்டு எனக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டுடாதீங்க.... அது உங்களால் முடியாது...ஏன்.... ஏன்னா நானே அதை கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு பதிவு போட்டு என் மானத்தை நாடு கடத்திட்டேன் ஹி..ஹி..ஹி..


இப்படியாக பொய்க்கிட்டுருந்த வேளையில் இஸ்லாமிய பெண்மணியில் ஒரு கட்டுரைப் போட்டி ஒன்று அறிவித்தார்கள். சரி.. நம்ம ப்ளாகில் தான் ஒண்ணும் உருப்படியாக எழுத முடியல... தானாக வந்த வாய்ப்பையாவது கொஞ்சம் உபயோகப்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுப்போம்னு ஒரு ஆர்வம் வந்தது. பரிசு வாங்கிற பேராசையெல்லாம் இல்லை (ஹி..ஹி..).. நமக்கு எப்பவும் மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) விட்டுக்கொடுத்து தான் பழக்கம்..... ஏதாவது வேலையில் இருக்கும்போது இந்த கட்டுரை சம்பந்தமா சில பாயிண்ட்ஸ் தோன்றும்... அதற்கு எப்படி அழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியாம முழிச்சிட்டுருக்கறது வேற விஷயம்.


ஒக்கே..கமின் டு தி பாயின்ட்... இந்த கட்டுரையில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இஸ்லாமிய தளத்தில் இக்கட்டுரையை ஒரு முஸ்லிம் தான் எழுத வேண்டும் என்றில்லை..யார் வேண்டுமானாலும் எழுதலாம்.... பரிசுகளை வெல்லலாம். யாராயினும் கட்டுரையின் விவாதத்தில் பாசிட்டிவான விஷயங்கள் மட்டுமல்ல உண்மையான நெகடிவ் விஷயங்களையும் பகிரலாம். அவை கல்வித்துறையில் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்  சமுதாயத்தைக்  கொஞ்சம் முன்னேற்றப் பாதையில்  இட்டுச் செல்ல உதவும்.




இது தான்  அப்பரிசுப் போட்டிக்கான  தலைப்பு..... பங்கு பெறுங்கள்... வெல்லலாம்..., இன் ஷா அல்லாஹ் :-)

                          



ஒன்றரை மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  வழக்கம்போல் மெதுவாக தூசு தட்டி எழுத ஆரம்பித்தால் நம்ம ஜலிலாக்கா ஒரு சமையல் போட்டி அறிவிச்சாங்க....  சரி...பெரிய சமையல் கலை வல்லுனர்கள் பங்கேற்கப்போற போட்டி... நாம போய் 'ஆஹா... சூப்பர் அக்கா...  போட்டியை வெற்றிகரமா நடத்த வாழ்த்துக்கள்' னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரலாம்னு பார்த்தா இடையில என் பேரைப பார்த்ததும் ஷாக்காகிட்டேன்...


அக்காவோட கையில கால்ல விழுந்தாவது இந்தப் போட்டியில இருந்து எஸ்கேப்பாகலாம்னு கமண்ட் பாக்ஸ் போனா அங்க ஏற்கனவே நான் சொல்ல நினைத்ததையெல்லாம் ஹுசைனம்மா ஜலிலாக்காகிட்ட சொல்லி நல்லா டோஸ் வாங்கி கட்டியிருந்தாங்க.. ஆனானப்பட்ட ஹுசைனம்மாவுக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு வம்புன்னு சத்தம் காட்டாமல் வந்தாச்சு.. :-((


யாராவது கொஞ்சம் குண்டான ஆண்களைப் பார்த்தால் நான் நினைத்துக் கொள்வேன்..... நல்லா சமைக்கத் தெரிந்த மனைவி அமையப் பெற்ற இவர் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தான்னு..... அதே சமயம் வத்தலும் தொத்தலுமாயிருக்கிற எங்க ஐயாத்துரையைப பார்த்துக் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கும்... இவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.... நம்ம மேல எந்தத் தப்புமில்லன்ற  உண்மையை நினைத்துக்  கொஞ்சம் சமாதானப்படுத்திக்குவேன். ;-))


இந்த நிலைமையில இருக்கிற என்னை... இந்த உண்மையெல்லாம் தெரியாத அப்பாவி ஜலிலாக்கா என்னையும் ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்னு நினச்சு அழைப்பு கொடுத்துட்டாங்க....  நமக்குத் தெரிந்த ரசம் ரெசிப்பியையும்  உப்புமா போடுற ரெசிப்பியையும்   அனுப்பி வைக்கிற முடிவுல இருக்கிறேன்.... அக்கா கோச்சிக்கக்கூடாது, ப்ளிஸ்....




ஆக, எப்பவும் போட்டியும் நினைவுமாக  ஒரு மாதிரி யோசனையிலயே கழிந்து கொண்டிருக்க (ஒண்ணும் செயல்வடிவம் பெறவில்லை ...அது வேற விஷயம்)... அப்புறம் கொஞ்ச நாட்கள்ல என் இனிய இல்லம் பாயிஸாவின் தளத்தில் மற்றொரு போட்டி...... இதில் நிறைய விஷயங்கள் புதுமையாக இருந்தது எனக்கு.... ரொம்ப யோசித்து குழந்தைகளுக்குப போட்டி வைத்திருக்காங்க...  ஆனா... பெற்றோருக்கும் பங்கு உண்டு....  அதாவது, பெற்றோர், இப்போட்டியினைப் பற்றி அவங்க தளத்தில் ஷேர் செய்தால் சுளையாக 20 மார்க்குகள் நோகாமல் கிடைக்கும்ன்ற மாதிரி நிறைய புது விதிகள் சொல்லியிருந்தாங்க....




இந்தப்  போட்டிக்கு முழுதாக ஒரு மாதம் அவகாசமுண்டு. அவங்க ப்ளாக்கில் பின்தொடர்பவர்களுக்கு   மட்டுமே அழைப்பு.... மற்றவர்கள் பங்கு பெற விருப்பப்பட்டால் பாலோவராகிக் கொள்ளுங்கள்னு அவங்க சொல்லியிருந்த டெக்னிக் எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு....;))


ஆக மொத்தத்தில் இந்த டிசம்பர் மாதம் போட்டி மாஆஆஆதம்..... வெற்றி பெறுவதை விட, பங்கு பெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன் முலம் பதிவர்களுக்கிடையே நல்ல அறிமுகமும் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. 


வாழ்க பதிவர்கள்...... வாழ்க போட்டிகள்..... வளர்க தோழமை.... !!!! போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)))

Monday, November 19, 2012

கேளுங்க சகோதரிகளே!!

எத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம்.  சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை சம்பாதித்தபின் அவர்களுக்குத்  துரோகம் இழைப்பது, ரோட்டில் நடக்கும்போது நகைகளை அறுத்துவிடுவது, இப்படி நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் திருடர்கள் ரூம் போட்டு யோசித்து தினுசு தினுசான முறையில் கொள்ளையடிக்கின்றனர்.


ஒகே..... எந்த வகையான திருட்டானாலும் நாம் முதலில் மனக்கவலையில் இறைவனின் மீது பாரத்தைப் போட்டாலும் அவனே திருட்டுப் போனவைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான் என சும்மா இருந்து விடுவதில்லை. அல்லல்பட்டு சம்பாதித்த நகை, பணத்தை மீட்க நம்மாலான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம்.... நாமே சுயமாக திருடனைப் பிடிக்க நிச்சயமாக முயல்வோம்.....காவல்துறையிடம் புகாரளிப்போம்....


ஆனால் அந்த காவல்துறையினரே நேரங்கெட்ட நேரத்திலோ, பெண்கள் தனியாக வீட்டிலிருக்கும் நேரங்களிலோ வீட்டுக் கதவைத் தட்டினால் திறக்கக்கூடாது என்ற அதிர்ச்சி தரும் உண்மையை உணர்த்தும், சமீபத்தில் (18-10-12 அன்று) துபாயில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தைச் சொன்னால்  உங்களுக்கே புரியும்..


கணவன் அலுவலகம் சென்ற பின் தன இரண்டு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்திருக்கிறார் கேரளவைஸ் சேர்ந்த என்பவர். அழைப்புமணி ஓசைக் கேட்கவே 'அந்நியர் யார் வந்தாலும் கதவைத்  திறக்கக்கூடது' என்ற முடிவுடன் வாசலுக்கு சென்றவர் இரண்டு பேர் காவல்துரைஸ் சீருடையில் நின்றிருக்கவே திறக்கவா வேண்டாமா எனக் குழம்பியிருக்கிறார்..... அவரது அந்த குழப்ப மனநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரது வீட்டை சோதனையிட வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவ்விருவர்.

டேய்.. நாந்தான்டா உன் கூட்டாளி...ஓடாதடா.....


போலீஸ் என்றதும் வேறு வழியின்றி கதவை திறந்தவர் 'எங்கும் போலீஸ் இது போன்று செய்ய மாட்டார்கள்' என்று கூறி  தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். (நானாகயிருந்தால் கொத்துச்சாவியை அவங்ககிட்ட கொடுத்துட்டு அவங்களுக்கு டி போட்டு  கொடுத்திருப்பேன்...ஹி .... ஹி )


அவர் சொல்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருக்கும் நகையனைத்தையும் தங்களிடம் கொடுத்து விடுமாறு கத்தி முனையில் மிரட்டியிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவரும் தன்னிடமிருந்த நகையனைத்தையும் அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அத்தோடு போக வேண்டியதுதானே ..... குழந்தை அணிந்திருக்கும் நகையையும் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.


ஆனால் குழந்தையின் வளையல்கள் கழட்ட முடியாதபடி இறுக்கமாக இருந்ததால் அவளுடைய கைகளையே வெட்டுமளவுக்குத துணிந்திருக்கின்றனர். பதறிய அப்பெண், சோப் போட்டு கழுவிக் கழட்டி கொடுத்திருக்கிறார்.  அந்த பிஞ்சுக் கைகளை வெட்டுமளவிற்கு கேவலம் அந்த நகை அவன் கண்களை மறைத்துவிட்டது :-((.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிருக்கு எந்த பாதிப்புமின்றி தாயும் மகளும் தப்பித்தனர். 'எங்கே தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ' என நினைத்து அவர்களுக்கு வேறு எந்த வித சேதமும் விளைவிக்காமல் கிளம்பிவிட்டனர். (இறைவன்தான் அந்த எண்ணத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்திருக்க வேண்டும்.... அல்ஹம்துலில்லாஹ் )


போலீசுக்குத் தகவல் தெரிவித்த அப்பெண்ணை  இரு பெண் போலீசார் வீட்டில் வந்து சந்தித்துத் தைரியமாக இருக்கும்படி ஆறுதலளித்துள்ளனர். அவரளித்த விவரங்களையும் அருகிலிருக்கும் கடைகளிலுள்ளவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அவ்விரு திருடர்களையும் போலீசார் கைது செய்துவிட்டனர்; திருடிய      நகைகளையும் மீட்டனர்.அவர்கள் வேலை செய்த கம்பனி இழுத்து மூடப்பட்டு இவர்கள் வேறு வேலை தேடி கொள்வதற்காக விசா கேன்சல் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளனர். நல்ல வேலையின்மை தானே  திருடர்கள் உருவாவதற்கு முதன்மையான காரணம்?!


இந்த சம்பவத்தில் மனதிற்கு பெரும் நிம்மதி தரும் விஷயம் அவர் உயிர் தப்பியதுதான். ஏனென்றால் இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்தான் துபாயில் கிட்டத்தட்ட இதே முறையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயினைத் திருடியவன் அப்பெண்ணின் உயிரையும் பறித்துவிட்டான் :((((((....... நமது திருச்சியைச் சேர்ந்த அவரது நான்கு வயது குழந்தை இப்பொழுது தாயை இழந்து தவிக்கிறது.  இச்சம்பவத்தில் கைது செய்யப்பட அக்குற்றவாளி சொன்னான் பாருங்க ஒரு காரணம் "அந்தம்மா அன்னிக்கு நகை போட்டு வந்ததைப் பார்த்த பிறகுதான் அவரிடம் திருட நினைத்தேன்". அவனுடைய வாக்குமுலத்தைப் பார்த்ததும், இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளில் ஒன்றான, பெண்களைப் பலவிதங்களில் பாதுகாக்கும் புர்காதான் நினைவிற்கு வந்தது.


அந்த பெண்ணும் புர்கா அணிந்திருக்கவில்லை என்றாலும்.... குறைந்த பட்சம் அவருடைய அலங்காரத்தை மறைக்கும் விதமாக உடையணிந்து வெளியே சென்றிருந்தால் இந்நேரம் அவரது குழந்தை தாயில்லாக் குழந்தை ஆகியிருக்காது... :-((((((


வீட்டில் இருக்கும்போது உங்கள் விருப்பப்படி இருந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.....வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் ஆடையலங்கரங்களை மறைத்துக் கொள்ளுங்கள்...அது உங்களுக்கு மட்டுமல்ல...உங்கள் குடும்பத்தினருக்கே நன்மையை மட்டுமே கொண்டு வரும். புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே!!! 

Monday, November 5, 2012

முற்பகல் செய்யின்....




தலை வலிக்கு ஏதாவது மரபொந்தில் தலையை வைத்தால் போய்டும்னாங்க..தலையா தலைவலி யான்னு கேக்கலியே.....அவ்வ்வ்வவ்...யாராவது காப்பாத்துங்களேன்..


என்ன ஆச்சு உனக்கு ....

நேத்து கொஞ்சம் வைக்கோல் அதிகமா சாப்பிட்டேன்றதுக்காக என் எஜமான் இன்னிக்கு  இத என் வாயில மாட்டிட்டாருடா... அவ்வ்வ்வ்....இத கொஞ்சம் கழட்டி விடேன்....


ஆஹா... அந்த பச்ச கலர் வீட்டுல கறி சமைக்கிரங்க... அந்த சிகப்பு கலர் வீட்டுல கிளி வளர்க்கிறாங்க.... இன்னிக்கு ஒரு கை பாத்துட வேண்டியதுதான்....

தூரத்தில் பார்த்தா நல்லாருக்கு... பக்கத்துல பார்த்தா தலை சுத்துதே.... யாராவது வந்து காப்பாத்துற வரை இங்கேயே நிக்க வேண்டியதுதான் ..... அவ்வ்வ்வவ்.......


ஆஹா.. புதுசா வந்த எதிர்த்த வீட்டு ரோஸி நாய்கிட்ட கொஞ்சம் ஸ்டன்ட் பண்ண நினைச்சு கண்ணு மண்ணு தெரியாம இப்படி வந்து மாட்டிக்கிட்டமே... ஏ..... அய்யா.... சீக்கிரமா என்னை காப்பாத்துங்க......


வானத்தில இருந்து நமக்கு மாலை விழுதுன்னு நினைத்து கழுத்த நீட்டுனா... என்னது இது.... எந்த பாவிப்பய எங்கிருந்து வீசுனான்னு தெரியலையே..


டேய்.... உன் மகனுக்கு 'யானைக்கும் அடி சறுக்கும்' சொல்லி புரியவைக்க முடியலன்னு என்னை இப்படி குழிக்குள தள்ளி விட்டுத்தான் புரியவைக்கனுமா...அவ்வவ்..... அம்ம்ம்மா ....


வாயில்லா ஜீவன்கள  கஷ்டப்படுத்துற அந்த பாவமெல்லாம் ஒண்ணா சேர்ந்து தான் உலகத்துல இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்குது..... அவ்வ்வ்வ்....