Thursday, November 19, 2015

உன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்


சூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு, அதிரை நிருபர் தளத்தில்.

//மால்களின் கட்டமைப்பு ஒவ்வொன்றுக்குப் பின்பும் வாடிக்கையாளர்களின் மனோதத்துவம் அலசி ஆராய்ந்த மெனக்கெடல்கள் பல நிறைந்துள்ளன என்பது வாடிக்கையாளர்களே அறியாத உண்மை.

மகளிர்க்கான, குழந்தைகளுக்கான பொருட்கள் நிறைந்த கடைகள் வரிசையாக ஒரே இடத்தில் அமைந்திருப்பதன் பிண்ணனி, ஒரு கடையில் வாங்க வேண்டாமென உறுதியுடன் கடந்துவிட்டாலும் அடுத்தடுத்த கடைகள் உங்கள் உறுதியைக் குலைத்துவிடுவதற்காகத்தான்.//

மேலும் படிக்க சுட்டுங்கள் இங்கு:



Tuesday, November 17, 2015

மாணவப்பருவம் கூறும் வாழ்க்கைப்பாடம்

மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துவிடலாம்.
முதல் வகையினர்:
பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகச்சரியான விடையை மட்டும் தெளிவாக, முக்கியமான பாயிண்டுகளை ஹைலைட் செய்து ஆசிரியரை இம்ப்ரஸ் செய்து மார்க் அள்ளிவிடுபவர்கள்.
இரண்டாம் வகையினர்:
கேட்கப்பட்ட வினாவிற்கான பதிலையும் எழுதி, அதைப் பற்றித் தனக்குத் தெரிந்த அதிகப்படியான விஷயங்களைையும் எழுதி இன்னும் அதிக மார்க் பெறுவார்கள்.
மூன்றாம் வகையினர்:
கேட்கப்பட்ட கேள்விக்கும் இவர்கள் எழுதும் பதிலுக்கும் சற்றும் சம்பந்தம் இருக்காது. ஆனால், முதல் இரண்டு வகையினர் அளிக்கும் பதிலைவிட அதிகப் பக்கங்களுக்கு எழுதியிருப்பார்கள். பேப்பர் திருத்தும் ஆசிரியர் மனநிலை பொறுத்து மதிப்பெண் கிடைக்கும். வாசிக்கவில்லையெனில் மார்க். வாசித்தால் அதோகதி தான்.

நீதி:
முதலிரண்டு வகையினர் வாழ்க்கையும் வாழ்க்கைத்துணையினரின் நிலையும் ஓரளவுக்கேனும் சீராக இருக்கும்.
ஆனால் இந்த மூன்றாம் வகையினரின் வாழ்க்கை.. அதுவும் வாழ்க்கைத்துணை பாடு ..... பெரும்பாடு தான். ஆழ்ந்த வாழ்த்துகள். :’(
(நேற்று ஹஸ் கூட பேசிட்டு இருக்கும்போது தோன்றியது.. அவ்வ்)